இராமநாதபுரம் அமிர்தா வித்யாலயம் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இந்நிகழ்வுக்குப் பள்ளி மேலாளர் பிரம்மச்சாரினி இலட்சுமி அம்மா அவர்கள் தலைமை தாங்கிட, பள்ளி முதல்வர் திருமதி கோகிலா மற்றும் பள்ளி துணை முதல்வர் திரு பாலவேல் முருகன் அவர்களின் வழிகாட்டுதலின்படி வித்யா உபதேசம் என்னும் கற்றலைத் தொடங்கும் நிகழ்வானது இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வில் புதிதாக கல்வி பயில சேர்க்கப்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளாகிய மாணவர்களின் கைப்பிடித்து நெல் மணியிலும் நாக்கிலும் உயிரின் தொடக்கமாகிய “அ” என்று எழுதி வெற்றியின் நாளாகிய விஜயதசமி அன்று படிப்பதற்கு வித்திட்டு, தங்களது குழந்தைகளை ஆசிர்வாதமும் செய்ய இந்நிகழ்வானது உள்ளங்களில் உவகை பொங்கிட நிறைவுற்றது.
அமிர்தா வித்யாலயம் பள்ளியில் விஜயதசமியை

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics