கன்னியாகுமரி மே 3
கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின்,கொட்டாரத்திலிருந்து பொற்றையடி வரை பல இடங்களில் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமமடைந்து வந்தனர்.அடிக்கடி விபத்துகளும் நடந்து வந்தது.பழுதடைந்த சாலை சீரமைக்க வேண்டுமென நெடுஞ்சாலை துறைக்கு பலர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் நெடுஞ்சாலை துறையினர் சாலையில் ஏற்பட்ட பள்ளங்களை சீரமைக்க முன்வரவில்லை.இந்நிலையில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் பாபு சொந்த நிதியியல் சாலை சீரமைப்பு நடைபெற்றது. இப்பணியினை அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு துவக்கி வைத்தார்.இதில்,கவுன்சிலர்கள் பிரேம் ஆனநத் ,பொன்முடி,திமுக நிர்வாகிகள் பொன் ஜான்சன்,வினோத்,தமிழ் மாறன்,அகஸ்தியலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.



