பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் 56வது பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது இந்த இந்த முகாமில் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், முன்னிலை வைத்தார். தமிழ் கவுன்சிலர் தமிழ்சங்கர் வரவேற்புரை ஆற்றினார். இந்த மருத்துவ முகாமில், சர்க்கரை, இருதயம், பிசியோதெரபி, பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும், சிறுநீரக கோளாறு, எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தமான பிரச்சனைகள், கண் காது தொண்டை மூக்கு சம்பந்தமான பிரச்சனைககளுக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இம்முகாமில் மருத்துவர் பிரித்விராஜ்குமார், மருத்துவர் சிவகுமார், மருத்துவர் வசந்தகுமார், மருத்துவர் சுந்தரமூர்த்தி, மருத்துவர் வேலு, மருத்துவர் அருள் உள்ளிட்ட மருத்துவர்களும், மற்றும் மேகநாதன், ராஜசேகர், டி வி கணேசன், கேவி முருகன், ராமச்சந்திரன், குமார், சந்திரன், சந்திரன், பழனி, நட்ராஜ், சரவணன், ராஜா, மோகன், ராகவன் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இம்முகாமில் பங்கேற்று பயன் பெற்றனர். கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்



