பெரியகுளம் அக் – 06
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான மகளிர் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கள்ளிப்பட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஏராளமான மகளிர்கள் கலந்து கொண்ட நிலையில் தந்தை பெரியார் தெரு,அம்பேத்கர் நகர்,நாகம்மாள் கோவில் தெரு,வள்ளியம்மை தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாய தினக்கூலி தொழிலாளிகளான முருக வள்ளி,பொன்னழகு,மாரியம்மாள்,பழனியம்மாள்,மாரியம்மாள்,சின்னப்பொண்ணு,கள்ளிச்சி,சின்ன முருகு , கொடியரசி, சித்ரகலா, மலர், பாண்டியம்மாள், அமராவதி, ப்ரியா, பூசையம்மாள் மற்றும் வழக்கறிஞர் விஜி மணிவாசகம் ஆகியோர் அன்றாடம் கூலி வேலைக்கு சென்ற தொகையை சேமித்து வைத்துக்கொண்டு ரூபாய் பத்தாயிரம் மதிப்பிலான ஏலக்காய் மாலையை அணிவித்தனர்.இந்நிகழ்வானது மாநாட்டில் கலந்து கொண்டோர் மட்டுமல்லாமல் அனைவரையும் நெகழ்ச்சியில் ஆழ்த்தியது.மேலும் மாநாட்டில் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பேசும் போது ” இதற்கு முன்பு நாக்பூரில் 1942 ல் புரட்சியாளர் அம்பேத்கருக்கு கூலி வேலைக்கு சென்று வந்த ஏழை பெண்கள் சார்பில் மாலை அணிவித்தனர். நீண்ட வருடங்களுக்குப் பிறகு வாழும் புரட்சியாளர் தொல். திருமாவளவனுக்கு விவசாய கூலித் தொழிலாளி பெண்கள் ஏலக்காய் மாலை அணிவித்தது ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்தது ஆகும்” என்று வர்ணித்தார்.விசிக தலைவர் தொல். திருமாவளவனுக்கு ஏலக்காய் மாலை அணிவித்த பெண்களுக்கு சமூக வலைதளங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிகின்றன.