சென்னை, வில்லிவாக்கம் சிட்டிபாபு மேம்பாலம் அருகில் ஜி.கே.எம் காலனியில் லட்சுமி சக்தி சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர் அருள்பாலித்து கொண்டிருக்கும் நவராத்திரி திருக்கோவிலில் ஆண்டுதோறும் கொலு கண்காட்சி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் 10 ஆம் ஆண்டு நவராத்திரி கொலு கண்காட்சி திருவிழாவை அருள்மிகு லட்சுமி சக்தி சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரின் திருவருள் துணைகொண்டு ஆன்மீக வள்ளல் டி.கே.இராஜாபாதர் செட்டியார் அவர்களின் இசைவிற்கிணங்க அவரது முதல்வர் ஆன்மீக வள்ளல் டி.ஆர்.வேலுமணி- வே.இலட்சுமி தம்பதியரால் கட்டப்பட்ட நவராத்திரி திருக்கோயிலில் நிகழும் மங்களகரமான 17ஆம் நாள் காலை 9.00 மணிக்கு மேல் 10 ஆம் ஆண்டு நவராத்திரி கொலு கண்காட்சி திருவிழாவை தேவி குகயோகி அருளாளர் புண்ணியகோட்டி மதுரை முத்து சுவாமிகள் திருவடிசூலம் ஆதிமகாசக்தி விஸ்வரூபிணி கருமாரியம்மன் ஆலய ஸ்தாபகர் கொடியேற்றி தொடங்கி வைத்தார்.