ஸ்ரீவில்லிபுத்தூர்,
கலசலிங்கம்பல்கலையில்மகளிர் மேம்பாட்டு குழு சார்பில்,
“மகளிர் மேம்பாட்டு சட்டம், பாதுகாப்பு சட்ட உரிமைகள், பாதுகாப்பு சட்டம் மற்றும் ஆதரவு முறைகள் “தலைப்பில் இரண்டு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கு
வேந்தர் முனைவர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
இணைவேந்தர் டாக்டர் எஸ். அறிவழகி ஸ்ரீ தரன், துணைத் தலைவர் எஸ்.சசி ஆனந்த், துணை வேந்தர் எஸ். நாராயணன், பதிவாளர் வி.வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் மேம்பாட்டு குழுத் தலைவர் எம். கல்பனா வரவேற்றார். கலசலிங்கம் சட்டத்துறை வழக்கறிஞர் ஆர்.ஜி. பாரதி, பேராசிரியைகள் டி. முத்துலெட்சுமி மற்றும் எம்.மகிஷா மலர் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர். பேராசிரியைகள் டி.கீதா, தி.சண்முக பிரியா மற்றும் ஆர்த்தி ஆகியோர் நிகழ்ச்சிகளை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.