கிருஷ்ணகிரி அக் 3: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிகப்பெரிய பஞ்சாயத்து கட்டிக்கானப்பள்ளி ஆகும்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கட்டிகானப்பள்ளி ஊராட்சியை கடந்த வாரம் கிருஷ்ணகிரி நகராட்சியுடன் இணைத்து மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இந்த நிலையில் கட்டிகானப்பள்ளி ஊராட்சி இணைக்கப்படுவதை கண்டித்தும், நகராட்சியில் இணைக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் இன்று நடைபெற இருந்த கிராம சபா கூட்டத்தை புறக்கணித்தனர். மேலும் ஊராட்சியில் பொதுமக்கள், விவசாயிகள், 100 நாள் வேலைப் பணியாளர்கள், உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கைகளில் புறக்கணிப்பு பாதாதைகளை ஏந்தியபடி கிராம சபை கூட்டத்தை புறகணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி தாலுக்கா காவல்துறை ஆய்வாளர் குலசேகரன் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் .
சுமார் 2 மணி நேர தர்ணா போராட்டத்திற்கு பிறகு வட்டார வளர்ச்சி அலுவலர் சிவானந்தம் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். அரசாணை வெளியிடவில்லை, தங்களுக்கு முறைப்படி தகவல் வரவில்லை, என உறுதி அளித்த பிறகுபொதுமக்கள் கலைந்து சென்றனர். சம்பவ இடத்தில்
பஞ்சாயத்து தலைவர் ஜி.காயத்திரிதேவி கோவிந்தராஜ், துணைத் தலைவர் பா. செல்விபாஸ்கர், ஊராட்சி செயலாளர் எம்.ஜெயக்குமார், கிராம நிர்வாக அலுவலர் முகமது சுபான், மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், உட்பட பலர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.