சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜனை மரியாதை நிமித்தமாக சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை செம்மஞ்சேரி 200 வது வார்டு கவுன்சிலர் அ.முருகேசன் வழங்கினார். அப்போது மேயரிடம் சோழிங்கநல்லூர் ராஜிவ் காந்தி நகரில் பல வருடங்களாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டியும் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் மெட்ரோ பணிகளால் பழைய குழாய்களை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளதால் அப்பகுதியில் குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது எனவே பழைய குழாய்களை அகற்றாமல் மெட்ரோ குடிநீர் இணைப்புகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சாலைகளை சீரமைக்கவும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பேசினார். இதனையடுத்து மனுவை ஏற்ற மேயர் பிரியா ராஜன், மனுக்களை பரிசீலனை செய்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.



