சுசீந்திரம் அக் 1
குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள தேரூர் பேரூராட்சியில் நேற்று மன்ற சாதாரண கூட்டம் செயல் அலுவலர் ராஜேஷ் பேரூராட்சி தலைவர் அமுதா ராணி தலைமையில் நடைபெற்றது அப்போது வார்டு உறுப்பினர்கள் தங்கள் கொடுத்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூட்டத்தை புறக்கணித்து வெளி நடப்பு செய்தனர் இதுகுறித்து பத்திரிகையாளரிடம் கூறும்போது தேரூர் இரண்டாம் நிலை பேரூராட்சி வார்டு எண் 2 ல் 2023 2024 கலைஞர் நகர் புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் நடைபெற்ற பணியில் முறைகேடு மற்றும் வேலை முடிக்கப்பட்ட தெருக்களை மீண்டும் பொது நிதியின் கீழ் வேலை மேற்கொள்ள மன்ற அனுமதிக்கு வைக்கப்பட்டுள்ளது தலைவரின் கணவர் மன்ற உறுப்பினர்களிடமும் அலுவலக நிர்வாகத்தில் தலையிடுவது குறித்தும் தீர்மான புத்தகத்தில் தலைவர் தன்னிச்சையாக செயல்படுவது குறித்தும் நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 24 9 2024 அன்று மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குனரிடமும் மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் மனு வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே நாங்கள் நடவடிக்கை எடுக்கும் வரை இந்தக் கூட்டத்தை புறக்கணிக்க உள்ளோம் என கூறினார்கள். இதில் பேரூராட்சி துணைத் தலைவர் மாதவன் பிள்ளை 6 வது வார்டு உறுப்பினர், மாலினி 3வது வார்டு உறுப்பினர், ஆறுமுகம் 13 வது வார்டு உறுப்பினர், ராஜஸ்ரீ 15,வதுஉறுப்பினர், சரஸ்வதி 5வதுவார்டு உறுப்பினர், மீனாட்சி 10வது வார்டு உறுப்பினர், மணிகண்டன் 8வது வார்டு உறுப்பினர் ஐயப்பன் ஆகியோர் கூட்டத்தை புறக்கணித்தனர்.