கன்னியாகுமரி அக் 1
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவுப்படி கன்னியாகுமரி காவல்துறை காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் மேற்பார்வையில் கன்னியாகுமாரி போக்குவரத்து ஆய்வாளர் பிரபு தலைமையில் உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் மற்றும் காவலர்கள் கன்னியாகுமரி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த சிறுவர்களை நிறுத்தி ஆவணங்களை பரிசோதித்ததில் அந்த சிறுவர்களுக்கு 18 வயது ஆகாதது தெரிய வந்தது, எனது 18 வயது குறைவான சிறுவர்கள் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காகவும் மேலும் வாகனத்தில் ஓட்டுநர் உரிமம் இன்றியும், அதிவேகம் மற்றும் நம்பர் பலகை இன்றியும் ஓட்டிவந்த 15 இரண்டு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டதுடன் அதிகமாக ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர் மற்றும் வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த எக்ஸ்ட்ரா பிட்டிங் அனைத்தும் போக்குவரத்து காவல்துறையினரால் கழற்றி அகற்றப்பட்டது.