நாகர்கோவில் செப் 30
குமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தொகுதிக்கான தேர்தலில் 47 சதவீதம் வாக்குகளைப் பெற்று மனோ தங்கராஜ் வெற்றி பெற்றார் அதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அந்தத் தொகுதியில் வேட்பாளராக களம் கண்டு முன்பை விட அதாவது 52% வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார் 2021 இல் நடைபெற்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியை அதிமுக, நாகர்கோவில் தொகுதியை பாஜக கைப்பற்றியது. மூன்று தொகுதிகளை கூட்டணி கட்சியான காங்கிரஸ் கைப்பற்றியது. எனவே கன்னியாகுமரியில் திமுக போட்டியிட்ட மூன்று தொகுதிகளில் இரண்டு தொகுதிகளில் தோல்வியை தழுவியது. இதில் பத்மநாபபுரம் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட்ட மனோ தங்கராஜ் முன்பை விட அதிக வாக்கு பெற்று வெற்றி பெற்றதால் முதல்வர் மு க ஸ்டாலின் அமைச்சரவையில் இடம் பிடித்தார். இந்நிலையில் நேற்றைய தினம் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமசந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் தளத்தில் இவ்வாறாக பதிவிட்டுள்ளார்.
2021 – தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சராக பொறுப்பேற்ற போது தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதி 9.5% என்றிருந்தது ஒரே ஆண்டில் 2022-ல் 16.4% மாகவும், 2023-ல் 25% மாகவும் உயர்ந்தது.
2023-ல் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றபோது ஆவின் பால் கொள்முதல் நாளொன்றிற்கு 26 லட்சம் லிட்டராக இருந்தது 2024-ல் ஆவின் வரலாற்றில் முதன் முறையாக 38 லட்சம் லிட்டராக உயர்ந்தது. விவசாய பெருங்குடி மக்கள் உற்பத்தி செய்யும் பாலுக்கு உரிய விலை கிடைப்பதையும், 10 நாட்களுக்கு ஒரு முறை பால் பணம் பட்டுவாடா செய்வதையும், பொதுமக்களுக்கு எந்தவித தட்டுப்பாடுமின்றி பால் விநியோகம் செய்யும் நிலையை உருவாக்கியதும் மன நிறைவு தருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மதவாத சக்திகளின் பிரிவினை அரசியலை முறியடித்து மக்களை ஒன்றுபடுத்தி மாவட்டத்தை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் சென்றுள்ளேன்.
இப்பணிக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி!
மதவாத பாசிச அரசியலை எதிர்த்து, ஜனநாயக அமைப்புகளை பலப்படுத்தி சமூக நீதியை நிலைநாட்ட தமிழ்நாட்டில் எடுக்கப்படும் முன்னெடுப்புகளில் எனது பங்களிப்பு தொடர்ந்து இருக்கும்.