கம்பம்.
தேனி மாவட்டம் கம்பம் ஒன்பதாவது வார்டு பகுதியில் கழிவுநீர் வடிகாலில் குப்பைகள் தேங்கி மழையின் காரணமாக கழிவுநீர் சாலையில் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
ஒன்பதாவது வார்டு அருந்ததியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சாவடி அருகே உள்ள தெருவில் நேற்று பெய்த மழையின் காரணமாக கழிவுநீர் வடிகாலில் குப்பைகள் தேங்கி அடைப்பு ஏற்பட்டது. இதன்படி மழை நீருடன் கழிவு நீர் கலந்து சாலையில் செல்ல தொடங்கியது இதனால் அவ்வழியை நடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் முகம் சுளித்து சென்றனர். அது மட்டுமின்றி அப்பகுதி குடியிருப்பு வாசிகள் இரவு நேரங்களில் துவங்கியதால் சாக்கடை புழுக்கள் வீட்டிற்குள் நுழைந்த அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. காலையில் எழுந்தவுடன் வீட்டின் கதவை திறந்து பார்த்த பொழுது சாலை முழுவதும் ஒரே புழுவும் சக அதிகமாக இருந்துள்ளது இதனை கண்ட பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் இப்பகுதியில் உள்ள கழிவுநீர் வடிகாலை சுத்தம் செய்து மழை நீர் செல்வதற்கு வழி வகுக்க வேண்டும் என கம்பம் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.



