தென்தாமரைக்குளம்,செப்.29-
குமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அடுத்த புன்னையடி அரசுத் தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறையின் சார்பில் கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது. கவுன்சிலர் எட்வின்ராஜ் முன்னிலையில் முகாமை கவுன்சிலர் பூவியூர் காமராஜ் தொடக்கிவைத்தார்.
கண் மருத்துவர் தேஜஸ் பரிசோதனை செய்து பொதுமக்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார் .
இதில் கண்பரிசோதகர் ராஜேஸ்வரி ,சுகாதார செவிலியர் புனிதா மெர்லின் ,சுகாதார தன்னார்வலர் கலைவாணி ஆகியோர் கலந்து கொண்டு பணியாற்றினர் .
முகாமில் தி.மு.க நிர்வாகிகள் செல்வசாம் ஜெபஸ்டீபன்,ஜேக்கப் ,ஒபிலின்ஜோஸ்வா ,கேரிகிரிஸ்டன், காலேப்பிரவின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.