சென்னை, கோடம்பாக்கம் ஆண்டவர் நகர் தெருவில் உள்ள அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவினை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று அதன் பின்னர் வருகை புரிந்த பக்தர்களுக்கு தீபாராதனை காட்சி வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகளும் அதனைத் தொடர்ந்து மாபெரும் அன்னதானமும்
வழங்கப்பட்டது
இதற்கான ஏற்பாடுகளை இ.டி.பிரகாசம் மல்லிகா குடும்பத்தினர் மற்றும் ஆலய நிர்வாகிகள் கும்பாபிஷேக விழாக் குழுவினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.



