திருவள்ளூரில் பெரியார் 146 வது பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு பேரணி நடைபெற்றது.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் மாஸ்டர் அருண் கௌதம் தலைமையில் காந்திநகர் பாலாஜி ஏற்பாட்டில் புல்லரம்பாக்கம் பகுதியில் மது மற்றும் போதை ஒழிப்பு பேரணி நடைபெற்றது.
இந்த நிகழ்வின் போது ராணிப்பேட்டை மண்டல செயலாளர் மூவா, சித்தார்த் கைவண்டு செந்தில் புல்லரம்பாக்கம் புருஷோத் விலபாக்கம் வெங்கடேசன் மற்றும் புல்லரம்பாக்கம் வெள்ளை, ஆகியோர் கலந்து கொண்டனர்.முன்னதாக பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது,