தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் கீழ முக்கூட்டு பகுதியில் உள்ள பெரியாரின் திருவுருவச்சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு பெரியாரின் திருவுருவட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து பெரியாரின் திருவுருவர் சிலைக்கு முன்பு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் செம்பை வடக்கு ஒன்றிய செயலாளர் செயலாளர் அன்பழகன், மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் ஸ்ரீதர், மாவட்டத் துணைச் செயலாளர் ஞானவேலன், செல்வமணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மருது, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தில்,ஒன்றிய செயலாளர் விஜயகுமார், மற்றும் திமுகவினர் சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செம்பனார்கோவிலில் பெரியாரின் 146 வது பிறந்தநாள்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics