தென்காசி மாவட்டம், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம், பொய்கை ஊராட்சி, கோவிலாண்டனூர் கிராமத்தில் 30 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் பொய்கை ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயக்குமார் வரவேற்றார். தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமாகிய மா.செல்லத்துரை, ஒன்றிய குழுத் தலைவர் சுப்பம்மாள் பால்ராஜ் அடிக்கல் நாட்டினார்கள் மேலும் இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் .பா.சுரேஷ், ஒன்றிய குழு துணைத்தலைவர் ஐவேந்திரன் திணேஷ், அவைத்தலைவர் பூரணசந்திரன், நயினாரகரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் SBKT குமார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர், ஊராட்சி செயலர், வலசை இளைஞரணி மதி, கிளைகழக செயலாளர் சபரிராஜ் மற்றும் கிளைகழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.



