தென்காசி மாவட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் மாவட்ட தொழில்மையம் சார்பில் அனைத்து வங்கி கிளைகளின் மூலம் கல்விக்கடன் வழங்கும் முகாம் மற்றும் தொழில் முனைவோருக்கு கடன் உதவி வழங்கும் முகாம் மாவட்டஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் அனைத்து வங்கி கிளைகளின் மூலம் கல்விக்கடன் வழங்கும் முகாம் மற்றும் தொழில் முனைவோருக்கு கடன் உதவி வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் தலைமையில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இம்முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் தெரிவித்ததாவது
தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டு 10-வதுமற்றும் 12-வதுவகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்காக தேவைப்படும் கல்விக் கடனுக்காக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் 27.8.2024 முதல் 4.9.2024 வரை வட்டார அளவில் முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் சேகரிக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் கல்விக்கடன் பெறுவது குறித்து மாணவ,மாணவிகளுக்குஆலோசனைகள் வழங்கப்பட்டு வித்யா லெட்சுமி போர்டல் மற்றும் ஜன்சமர்த் போர்டல் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு இம்முகாமின் வாயிலாக 120 மாணவ,மாணவிகளுக்குரூ.5.15 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில்குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக இலக்கு 2024-25-ம்நிதியாண்டிற்குரூ. 2 லட்சத்து 78 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதில் தென்காசி மாவட்டத்திற்கு MSME பிரிவின் கீழ் கடன் இலக்காக ரூ.1809.86 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் நிலவும் மூலப்பொருள்களின் வளம், உள்கட்டமைப்பு, திறமை வாய்ந்த பணியாளர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு வழங்கப்படும் முக்கியத்துவம் வணிக ரீதியான வசதி வாய்ப்புகள் ஆகியவை தொழில்துறையில் முதலீடு செய்வோர்க்கு சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது. மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்படும் சுய வேலைவாய்ப்புத் திட்டங்களான UYEGP, PMEGP, NEEDS, AABCS மற்றும் PMFME திட்டங்களின் வாயிலாக குறு, சிறு மற்றும்ந டுத்தரத் தொழில்கள் தொடங்குவதற்கு வங்கிகளின் மூலம் 2713 நபர்களுக்கு ரூ.107.84 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.
மேலும் மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில தமிழக அரசின் மூலமாக செயல்படுத்தப்பட்டுவரும்கல்விக்கடன் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். தொழில்முனைவோர்கள்மாவட்ட தொழில்மையம் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும்திட்டங்களில் விண்ணப்பித்து அதிக அளவில் தொழில்கள் தொடங்கி தென்காசி மாவட்டத்தை தொழில்வளர்ச்சியில் முன்னோடி மாவட்டமாக உருவாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் தெரிவித்தார்.
இம்முகாமில் சுய வேலை வாய்ப்பு திட்டங்கள் அதன் மூலம் பெறத்தக்க மானியங்கள், வங்கிகள் வழங்கும் கடன் வகைகள் அவற்றை பெறும் முறைகள் குறித்து விளக்கிக்கூறப்பட்டது.
இம்முகாமில் தென்காசி மாவட்ட தொழில் மைய இணை இயக்குநர் / பொது மேலாளர் ப.மாரியம்மாள், முன்னோடி வங்கி மேலாளர் ஆ.கணேசன், இந்திய ரிசர்வ் வங்கி அ லுவலர் ஆர்.இராதாகிருஷ்ணன், மண்டல மேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (திருநெல்வேலி) பாஸ்கரன், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் உதயகிருஷ்ணன், தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், தென்காசி ஒன்றியக்குழுத் தலைவர் ஷேக்அப்துல்லா, ஒன்றியக் குழுஷதுணைத் தலைவர் கனகராஜ் முத்துப்பாண்டியன், மற்றும் தென்காசி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கத் தலைவர் அன்பழகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.