சங்கரன்கோவில் நகராட்சி 30 வது வார்டு பாட்டத்தூரில் வைத்து தியாகி இமானுவேல் சேகரனின் 67ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நகராட்சி கவுன்சிலர் வேல்ராஜன், வார்டு செயலாளர் தடிகாரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சரவணன் ,மற்றும் ஊர் நாட்டாமைகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



