சென்னை, செப்டம்பர், 04, தமிழ்நாட்டில் கள்ளுக்கடை திறக்க அரசு அனுமதிக்க வேண்டி
பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் அனைத்து நாடார் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர் தனபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் திருவள்ளூர் மத்திய கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பா. பெஞ்சமின், அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவன தலைவர் ராஜேஸ்வரி பிரியா, தமிழ்நாடு நாடார் இளைஞர் முன்னேற்ற பேரவை பொதுச் செயலாளர் வி .எஸ். ஏ மைக்கேல்ராஜ், அதிமுக இலக்கிய அணி மாநில துணை செயலாளர் இ .சி சேகர், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை ஏ. முத்துக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
என்.ஆர்.தனபாலன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
தமிழ்நாட்டில் கள்ளுக்கடை திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் . பனைமரம் ஏறும் போது விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் அவர்களின் குடும்பத்திற்கு தலா,ரூ.10 லட்சம் நிதியும் அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு பணியும் வழங்க வேண்டும். பதநீர் இறக்கி விற்பனை செய்யும் மரம் ஏறும் தொழிலாளர்கள் மீது காவல்துறை பொய் வழக்கு போடுவது நிறுத்திக் கொள்ள வேண்டும் .
கருப்பட்டி மற்றும் பனைப் பொருட்களை அரசு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து ரேஷன் கடையில் விற்பனை செய்ய வேண்டும் .
கோவை வேளாண்மை கல்லூரி உருவாக்கியுள்ள நவீன பனைமரம் ஏறும் இயந்திரத்தை பனைத் தொழிலாளர்களுக்கு அரசு இலவசமாக வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளைஅரசு நிறைவேற்ற வேற்றவேண்டும் என்றார் .