கந்திலி:செப்:02, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட செவ்வாத்தூர் புதூர் பகுதியில் இயங்கி வரும் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு (2024-2026) கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ம.திருநாவுக்கரசு தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் தேர்தல் நடத்தும் மேற்பார்வையாளராக V.அரசு முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு புதிதாக பொறுப்பேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பள்ளி மேலாண்மை குழுவிற்கு பொறுப்பாளர்களாக தலைவர் S.வாசுகி, துணைத் தலைவர் M.ஜீவா, செயலாளர் ம.திருநாவுக்கரசு தலைமையாசிரியர், ஆசிரியர் உறுப்பினர் K.ரஞ்சினி, கல்வியாளர் P.பாலு, மகளிர் சுய உதவிக் குழு V.சுப்புலட்சுமி, வார்டு உறுப்பினர்கள் S.சுமதி, S.மாதம்மாள், பெற்றோர் உறுப்பினர்கள் ஜான்சி ராணி, சரிதா, காமாட்சி, சங்கீதா, சரிதா, அருள்மொழி, பானுப்பிரியா, ஜெயசித்ரா, சுகன்யா, ரூபினி, சத்யா, சரோஜினி, ஜாக்லின், சக்திவேல் ஆகியோர் பொறுப்பு ஏற்று கொண்டனர். மேலும் இக்கூட்டத்தில் ஆசிரியர்கள் K.கிரிஜா, B.சுகந்தி, R.புவனேஸ்வரி, A.அனுசியா தேவி, S.ஸ்ரீதர், துணைத்தலைவர் R.ரவி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். இக்கூட்டத்தில் பொறுப்பு ஏற்றுக் கொண்ட அனைவரும் பள்ளி மேலாண்மை குழுவிற்கு சட்ட திட்டங்களை மதித்து நடந்து கொள்கிறேன், அரசின் நலத்திட்டங்கள் மாணவிகளுக்கு சென்று சேரும் வகையில் ஒத்துழைப்பு செய்வேன், பள்ளி மாணவிகளுக்கு தரமான கல்விகள் சென்று சேர உறுதியளிப்பேன். பள்ளி வளாகம் மற்றும் ஆசிரியர் மாணவிகளிடையே மகிழ்ச்சியான சூழலை உருவாக்க ஏற்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு செய்வேன். மேலும் பள்ளி வளர்ச்சிக்கு எப்பொழுதும் உறுதியாக இருப்பேன் என்று அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இக்கூட்டத்தில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு புதிதாக பொறுப்பு ஏற்றுக் கொண்ட பொறுப்பாளர்கள், மாணவிகள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் பங்கேற்றனர். நிகழ்வின் இறுதியில் ஆசிரியர் K.ரஞ்சனி நன்றியுரை வழங்கினார்.
பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics