கேரளா, வயநாடு பகுதிகளில் சமீபத்தில் நடந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு, கலசலிங்கம் பல்கலை என்.எஸ்.எஸ், ஒய்.ஆர்.சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து இவர்கள் சார்பில் கேரளா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூபாய் 1,00,728 ,ம் நிவாரண பொருட்களையும் பல்கலையில் சேகரித்தனர். நிவாரண பொருட்களை ஒரு வேன் முழுவதும் 15 பண்டல்களில் போட்டு ஏற்றி வைத்து வயநாட்டிற்கு புறப்பட்டனர்.
பல்கலை வேந்தர் முனைவர். கே.ஸ்ரீதரன், இணைவேந்தர் டாக்டர். அறிவழகி ஸ்ரீதரன், துணைத்தலைவர் முனைவர் எஸ். சசி ஆனந்த், துணைவேந்தர் முனைவர் எஸ். நாராயணன், பதிவாளர் முனைவர் வி. வாசுதேவன், மாணவர் நல இயக்குநர் முனைவர் சாம்சன்நேசராஜ் ஆகியோர் நிவாரண பொருட்கள் அடங்கிய வேனுக்கு கொடி அசைத்து மாணவர்களை வழி அனுப்பினர்.
பேராசிரியர்கள்
டி.ராஜ் பிரதேஷ்,
ப. தினேஷ்குமார், என்.எஸ்.எஸ், ஒய்.ஆர்.சி மாணவர்கள் அடங்கிய குழு வயநாடு சென்று இரண்டு நாட்கள் இருந்து நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.