ஸ்ரீவில்லிபுத்தூர்
கிருஷ்ணன்கோவில் லிங்கா குளோபல் பள்ளியில்,மதுரை,
சகோதயா கூட்டமைப்பு சார்பில் 14,17,19 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான நீச்சல் போட்டி நடைபெற்றது.
பள்ளி தாளாளர் முனைவர் கே ஸ்ரீதரன், சிறப்பு விருந்தினர்,சிவகாசி,ஹயக்கிரீவர் பள்ளி துணை முதல்வர் ராம்தாஸ் போட்டியை துவக்கி வைத்தனர்.
பள்ளி இயக்குநர்கள் டாக்டர் அறிவழகி ஸ்ரீதரன், முனைவர் எஸ்.சசி ஆனந்த் கலந்து கொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினர்.
பள்ளி முதல்வர் அல்கா சர்மா வரவேற்றார்.
50க்கும் மேற்பட்ட வெவ்வேறு பள்ளி மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.
உடற்கல்வி இயக்குனர் கருப்பசாமி,நீச்சல் பயிற்சியாளர் உதயகுமார் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்