தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேற்று இராமநாதபுரம் மாவட்டத்தில் கால்நடைப் பராமரிப்புத்துறையின் மூலம் ரூ.216.85 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவ கட்டடங்களை காணொளிக்காட்சியின் மூலம் திறந்து வைத்ததையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், சூரன்கோட்டை கால்நடை மருந்தக மருத்துவமனையில் குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார். உடன் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மரு.இராதாகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.



