By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ.1916.41 கோடி செலவில் அத்திக்கடவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • மாநிலம்
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
  • மருத்துவம்
  • அரசியல்
    • நாடாளுமன்ற தேர்தல்-2024
  • கல்வி
  • விளையாட்டு
  • குற்றம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ரூ.1916.41 கோடி செலவில் அத்திக்கடவு
ஈரோடுமாவட்டம்

ரூ.1916.41 கோடி செலவில் அத்திக்கடவு

தின தமிழ்
Last updated: August 18, 2024 12:45 pm
Published August 18, 2024
Share
SHARE

ரூ.1916.41 கோடி செலவில் அத்திக்கடவு அவினாசி திட்டம் நிறைவேற்றம் 

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்   காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கிவைத்தார்.

 

ஈரோடு ஆக 18

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமை செயலகத்தில், நீர்வளத் துறை சார்பில் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் 24,468 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் 1916.41 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டுள்ள அத்திக்கடவு அவிநாசி திட்டத்தினைக் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.

 

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலும், மக்களின் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்யவும். கிடைக்கப் பெறும் நீரை வீணாக்காமல் நீர்நிலைகளில் தேக்கி வைக்கும் பொருட்டும், புதிய நீராதாரங்களை உருவாக்குதல், ஏற்கெனவே உள்ள நீர்நிலைகள் மற்றும் அதன் உட்கட்டமைப்புகளை நல்ல முறையில் பராமரித்தல், பாசனக் கட்டமைப்புகளான அணைகள், அணைக்கட்டுகள், நிலத்தடி தடுப்புச் சுவர்கள், கால்வாய்கள், வாய்க்கால்கள், ஏரிகள் போன்றவற்றை உருவாக்குதல், புனரமைத்தல் மற்றும் பராமரித்தல் போன்ற பல்வேறு முக்கியப் பணிகளை நீர்வளத்துறை மேற்கொண்டு வருகிறது.

 

அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர முயற்சிகளின் பயனாக தற்போது அத்திக்கடவு -அவிநாசி திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

மறைந்த முதல் அமைச்சர் கருணாநிதி கோவை மாவட்ட விவசாயிகளின் நீண்ட காலக் கோரிக்கைகளை ஏற்று 1972-ஆம் ஆண்டில் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தைச் செயல்படுத்திட முனைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டார். அந்நிலையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் 1976-க்குப் பின் இத்திட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. மீண்டும் 1996- முதலமைச்சராகப் பொறுப்பேற்ற முதல் அமைச்சர் கருணாநிதி  இத்திட்டம் குறித்து மறுபடியும் ஆய்வு செய்து, திட்டத்தினை நிறைவேற்றிட ஒப்புதல் வழங்கினார். ஆனால் ஆட்சி மாற்றம் எற்பட்டதால் இத்திட்டத்தில் சுணக்கம் ஏற்பட்டது.

பின்னர். 2019-இல் இத்திட்டத்தைத் தொடங்கி நிறைவேற்றும்

பணிகள் தொடர்ந்தன என்றாலும், 2021 ல் 

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ஆட்சி அமைந்தபின்தான்

 

இத்திட்டத்தினை நிறைவேற்றிட ரூ,1916.41 கோடி ரூபாய்

 

மதிப்பீட்டில் திருத்திய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் விரைவு படுத்தப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்பொழுது அனைத்துப் விரைந்து பணிகளும் முடிவடைந்துள்ளன. சோதனை ஓட்டப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், அத்திக்கடவு அவிநாசி திட்டத்தினை  முதலமைச்சர் ஸ்டாலின்  காணொலி காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.

 

இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதன் மூலம் பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்ப்புறத்திலிருந்து ஆண்டொன்றிற்கு 1.50 டி.எம்.சி உபரி நீரை வினாடிக்கு 250 கன அடி வீதம் 70 நாட்களுக்கு நீரேற்று முறையில், 1065 கி.மீ. நீளத்திற்கு நிலத்தடியில் குழாய்ப் பதிப்பின் மூலம் ஈரோடு, திருப்பூர். கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 24,468 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் நீர்வளத்துறையின் 32 ஏரிகள், ஊராட்சி ஒன்றியத்தின் 42 ஏரிகள் மற்றும் 971 குளம் குட்டைகள், என மொத்தம் 1045 எண்ணிக்கையிலான ஏரிகள், குளம், குட்டைகளில் நீர் நிரப்பப்படும்.

 

இந்த நிகழ்ச்சியில்  நீர்வளத்துறை அமைச்சர்  துரைமுருகன் ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் திருமதி.  கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா  ம மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

ஈரோட்டிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சி துறை அமைச்சர்  முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ. பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஈ.ஆர். ஈஸ்வரன், ஏ.ஜி. வெங்கடாசலம்.   சரஸ்வதி, ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம்,ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர்  ராஜ கோபால் சுன்கரா

திருப்பூர் மாவட்ட ஆட்சி தலைவர்  கிறிஸ்துராஜ், 

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

You Might Also Like

முதுமலை யானை பாகன்களுக்கு வீடு

குத்தாலம் பகுதியில் (ஜமாபந்தி) வருவாய் தீர்ப்பாயம்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு திட்டம் 2025

திமுக சார்பில் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம்

சி பி எஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
இராமநாதபுரம்

சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

Aswini GopalaKrishnan Aswini GopalaKrishnan April 27, 2025
இறுதியாண்டு மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்
100 – க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு-ஹெல்மெட்
ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் அம்பேத்கர் பிறந்த நா
மாநில அளவில் முதலிடம் மாணவருக்கு பாராட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2024. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?