கிருஷ்ணகிரி ஆகஸ்ட் 11:
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் கிருஷ்ணகிரி சென்னை பைபாஸ் சாலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுபேதார் மேடு என்ற பகுதியில் கேரள மாநிலத்தை சேர்ந்த 43 வயதான எலியாஸ் என்ற ஓட்டுநரை அடித்துக் கொன்ற சம்பவத்தை கண்டித்தும், தமிழகத்தில் ஓட்டுநர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும், ஓட்டுநர்களை பணி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமூகநீதி அனைத்து வாகன ஓட்டுனர் தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் பத்மராஜன் தலைமை தாங்கினார். மேலும் மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். நகர தலைவர் கார்த்தி, மாவட்ட பொருளாளர் ராமமூர்த்தி, மாநில கவுரவ தலைவர் ராஜா, பொதுச் செயலாளர் நல்லிணை விஸ்வராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிலம்பரசன், மாவட்ட துணைத் தலைவர் முனுசாமி உள்ளிட்ட ஏராளமான வாகன ஓட்டுநர்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.