அரியலூர், ஜூலை:20
அரியலூர் மாவட்டம்,செந்துறை அருகே கோட்டைக்காடு கிராமத்தில் ஒரு வயது பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செந்துறை அடுத்த கோட்டைக்காடு, கீழத்தெருவைச் சேர்ந்தவர் ராஜா சந்தியா தம்பதினர் இவர்களது ஒரு வயது பெண் கிருத்திகா (1), மகன் மோனிஷ்(2) ஆகிய இருவரும், புதன்கிழமை மாலை விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில், சந்தியா அருகிலுள்ள பால்பண்ணையில் பால் ஊற்றச் சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு வந்து பார்த்த போது, கிருத்திகா சுய நினைவு இல்லாமல் வாயில் மண்ணுடன் கிடந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர், குழந்தையை பெண்ணாடம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றார். அங்கு பரிசோதித்ததில் கிருத்திகா ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த தளவாய் காவல் துறையினர், குழந்தையின் சடலத்தை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்.