மதுரை ஜூலை 16,
சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை மெகா மருத்துவ முகாம்
சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை மற்றும் சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை இணைந்து காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் சேகர் தலைமையில் சென்னை அடுத்த கோவிலம்பாக்கத்தில் ஸ்ரீ சிவனேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஜூலை 14 ந்தேதி காலை 8.00 மணி முதல் 1.00 மணி வரை பொதுமக்களுக்கான இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் சிறப்புடன் நடைபெற்றது. சிகிச்சை முகாமில் சுமார் 500 பேருக்கு மேல் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கண்களை பரிசோதித்துக் கொண்டனர் , இதில் 41 நபர்கள் மருத்துவரின் பரிந்துரை ஏற்று கண் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் நாட்களில் அவர்களுக்கு முற்றிலும் இலவசமாக கண் அறுவை சிகிச்சை வழங்கப்படும் என்பதை இந்த அமைப்பின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் முகாம் சிறப்பாக நடைபெற உதவிய சபையைச் சார்ந்த கண்ணன் கிருபாகரன் சுப்புராஜ் விநாயகமூர்த்தி ரமேஷ்பாபு சொக்கலிங்கம் ஆறுமுகம் முருகன் ரேகா லோகநாதன் ராமேஸ்வரி லஷ்மணன் பாலாஜி ஆனந்த் கனகராஜ் பழனி மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்