ராமநாதபுரம் ஜுலை 17-
ராமநாதபுரம் மாவட்டத்தில் போகலூர் ஊராட்சி ஒன்றியம், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், கமுதி ஊராட்சி ஒன்றியம் ஆகிய ஒன்றியங்களில் இன்று மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நடைபெற்றது.
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் சக்கரக்கோட்டை ஊராட்சியில் தனியார் மகாலில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது;
தமிழ்நாடு முதலமைச்சர் ஊடகப் பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் கடந்த வாரம் துவங்கப்பட்டு தொடர்ந்து இம் முகாம் நடைபெற்று வருகிறது.
அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் போகலூர் ஊராட்சி ஒன்றியம் முத்து செல்லாபுரம் கிராமத்தில் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் சக்கரக்கோட்டை ஊராட்சியிலும் கமுதி ஊராட்சி ஒன்றியம் ராமசாமி பட்டி ஊராட்சியிலும் இம்மு முகாம் நடைபெறுகிறது. இம்முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இம்முகாம் வருகின்ற 19.9.2024 அவரை 76 மையங்களில் நடைபெற உள்ளது. இம்முகாம் நடைபெறும் பொழுது அதனைச் சார்ந்த கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தங்களின் தேவைகள் குறித்து கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன் பெறலாம். இம் முகாமில் 17 க்கும் மேற்பட்ட துறை அலுவலர்கள் பங்கேற்பார்கள். இம் முகாமில் பெறக்கூடிய மனுக்களுக்கு 30 தினங்களுக்குள் ஊரிய தீர்வு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் இம் முகாம்களில் பங்கேற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
சக்கரக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமில் சக்கரக்கோட்டை ஊராட்சி தலைவர் யாழினி புஷ்பவள்ளி ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தாமரை செல்வி ராமநாதபுரம் தாசில்தார் சாமிநாதன் சமூக நலத்திட்ட பாதுகாப்பு தாசில்தார் பழனி குமார் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
போகலூர் ஊராட்சி ஒன்றியம் முத்துச்செல்லாபுரம் கிராமத்தில் நடைபெற்ற முகாமில் பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு சேர்மன் சத்யா குணசேகரன் பரமக்குடி தாசில்தார் சாந்தி பரமக்குடி தாலுகா சமூக நலத்திட்ட பாதுகாப்பு திட்டம் தாசில்தார் சேதுராமன் போகலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவண்ணன், அரியக்குடி ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கார்த்திக் பாண்டியன் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



