வேலூர்-15
வேலூர் மாவட்டம் வேலூர் மாவட்ட தச்சு தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் 15வது ஆண்டு விழா விருப்பாட்ச்சிபுரம் விஜயலட்சுமி திருமண மண்டபத்தில் தலைவர் வி. திருஞானம், துணைத்தலைவர்கள் எஸ் .ஸ்ரீனிவாசன், பி .அசோகன் ,ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் எ.ஆறுமுகம், துணைச் செயலாளர்கள் என் .முருகன், கே .முனுசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட தச்சு தொழிலாளர்கள் நலச் சங்க உறுப்பினர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.