சென்னை, குரோம்பேட்டை லக்ஷ்மி நகர் வைஷ்ணவா கல்லூரி அருகில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி கணபதி ஆலய ஜீர்ணோத்தாரண வர்ணகலாபரண அஷ்டபந்தன மகா நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ சக்தி மகா கணபதி மற்றும் பரிவார தெய்வங்களான துர்க்கை அம்மன், பஞ்சமுக ஆஞ்சநேயர் நவக்கிரகம் ஆகிய மூர்த்திகள் புதுப்பிக்கப்பட்டு வர்ணகலாபரணம் செய்து திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவினை தொடர்ந்து மகா தீபாராதனை தீர்த்த பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து வருகை புரிந்த பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய அறங்காவலர்கள் வி.வி.எஸ்.மணி ஏ.ஏ.யுவராஜ் எஸ்.குணசேகரன், ஏ.குருமூர்த்தி ஆர்.இராஜகோபாலன், ஆர்.வாசுதேவன் மற்றும் பி.பிரபு ஆலய நிர்வாகிகள் கும்பாபிஷேக விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.