தமிழ்நாடு விவசாயிகள் – தொழிலாளர்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம் மற்றும் தமிழ்நாடு அமைப்புச்சாராத் தொழிலாளர்கள் மத்திய சங்கம் ஆகியவற்றின் தலைவர் நலவாரியம் பெற்று தந்த சரித்திர நாயகன் பொன்குமார் பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் செ.ஸ்ரீரமேஷ் தலைமையில் திருநெல்வேலி மாவட்ட செயலாளர் ரசுல் நிஷா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட மரக்கன்றுகள் நடும் விழா நாகர்கோவில் ஒருங்கிணைந்த தொழிலாளர்த்துறை அலுவலகத்தில் நடைப்பெற்றது. இதில் தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்புதிட்டம் இல. ராஜகுமாரன், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் ஸ்ரீரமேஷ், திருநெல்வேலி மாவட்ட செயலாளர் ரசுல் நிஷா ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியினைை துவங்கி வைத்தனர்.



