புதுக்கடை, மார். 21 –
புதுக்கடை அருகே காப்புக்காடு சந்திப்பு பகுதியில் வசிப்பவர் ஜெரோவின் (29). இவர் தவெக கட்சியின் உறுப்பினர். இவர் தேர்தல் தேதி அறிவித்த பின்னர் கட்சியின் சின்னத்துடன் கொடியை பொதுமக்கள் பார்வைக்கு கம்பத்தில் கட்டி வைத்திருந்தார். புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தேங்காப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் ராஜன் (45). மீனவரான இவர் சம்பவ இடத்தில் உள்ள தமிழக வெற்றிக்கழக கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வையில் படும்படியாக கொடி மற்றும் கட்சி தலைவரின் படம் பதித்த பிளக்ஸ் போர்டுகள் வைத்துள்ளார். அவற்றை பறிமுதல் செய்து அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கைசூண்டி சந்திப்பு பகுதியில் உள்ளவர் வின்சென்ட் ராஜி (42). இவர் தனது வீட்டின் முன்பு பொதுமக்கள் பார்வைக்கு பார்வையில் படும்படியாக அரசு உத்தரவை மீறி நாம் தமிழர் கட்சியின் கொடியை, கொடி கம்பத்தில் கட்டி வைத்துள்ளார். இது குறித்து புதுக்கடை போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் குன்னத்தூர் சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு கோயில் அருகே பாரதிய ஜனதா கட்சியின் கொடி கம்பத்தில் கட்டி கொடி கட்டி வைக்கப்பட்டது. இது தொடர்பாக சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் என்பவர் பறிமுதல் செய்து கட்சி உறுப்பினர் மணிகண்டன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்தார்.
இதுபோன்று பார்த்திபபுரம் பகுதியில் உள்ள ஆனந்த் என்பவரின் காலிமனை காம்பவுண்ட் சுவரில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு காங்கிரஸ் சார்பில் சுவர் விளம்பரம் பொதுமக்கள் பார்வையில் படும்படியாக செய்யப்பட்டுள்ளது. இது குறித்து புதுக்கடை போலீசார் காங்கிரஸ் கட்சியின் வட்டாரத் தலைவர் ரகுபதி என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.


