தேனி.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இரண்டாம் நாளாக உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட தேவாரம், தேவாரம் மலை, தே.மீனாட்சிபுரம், பண்ணைப்புரம், பொட்டிபுரம், சங்கராபுரம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, தலைமையில் இன்று (28.06.2024) நடைப்பெற்றது.
உத்தமபாளையம், பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி, மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய ஐந்து வட்டாட்சியர் அலுவலகங்களில் நேற்றையதினம் நடைபெற்ற முகாமில் மொத்தம் 1208 மனுக்கள் பெறப்பட்டது.
இன்றைய தினம் உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட தேவாரம், தேவாரம் மலை, தே.மீனாட்சிபுரம், பண்ணைப்புரம், பொட்டிபுரம், சங்கராபுரம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலும், பெரியகுளம் வட்டத்தில் ஜெயமங்கலம் பகுதி – 1, பகுதி – 2 குள்ளப்புரம், மேல்மங்கலம் பகுதி-1, பகுதி-2 கிராமங்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி தலைமையிலும், தேனி வட்டத்தில் கோட்டூர், சீலையம்பட்டி, கொடுவிலார்பட்டி, ஜங்கால்பட்டி, கிராமங்களுக்கு ஆகிய கிராமங்களுக்கு தேனி உதவி ஆணையர் (கலால்) .ரவிச்சந்திரன் அவர்கள் தலைமையிலும், ஆண்டிபட்டி வட்டத்தில், புலிமான்கோம்பை, திம்மரசநாயக்கனூர் பகுதி -1, பகுதி -2 கிராமங்களுக்கு பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் .முத்துமாதவன் தலைமையிலும், போடிநாயக்கனூர் வட்டத்தில் போ.மீனாட்சிபுரம், பூதிப்புரம், கோடாங்கிபட்டி, உப்புக்கோட்டை ஆகிய கிராமங்களுக்கு உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் தாட்சாயினி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)-ல் பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டாக்கள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு-இறப்புச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை, மாதாந்திர உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இயற்கை மரணம், விபத்து நிவாரணத்தொகை, நலிந்தோர் உதவித்தொகை, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக உத்தமபாளையம் வட்டத்தில்-207, பெரியகுளம் வட்டத்தில்-230, தேனி வட்டத்தில்-142, போடிநாயக்கனூர் வட்டத்தில்-269 ஆண்டிபட்டி வட்டத்தில்-300 என மொத்தம் 1148 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) பெறப்படும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, தகுதி வாய்ந்த மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்கிட மாவட்ட ஆட்சித்தலைவர் துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
வேளாண்மை துறையின் சார்பில் தமிழக முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் மண் வளத்தை பேணிகாப்பதற்கு, பசுந்தால் உரம்(தக்கை பூண்டு விதை) 2 பயனாளிக்கும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தலா ரூ.13,349/- மதிப்பிலான ஸ்மார்ட்போன் 18 பயனாளிகளுக்கும், 4 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டையும், வருவாய்த்துறையின் சார்பில் பட்டா மாறுதல் 2 பயனாளிகளுக்கும் என மொத்தம் 24 நபர்களுக்கு ரூ.2.4 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்வில் உதவி இயக்குநர் (நில அளவை) .ப.அப்பாஸ், மாவட்ட ஆட்சியரக அலுவலக பொது மேலாளர் .ஜஸ்டின் சாந்தப்பா, வட்டாட்சியர் .சுந்தர்லால், அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



