இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், திம்மநாதபுரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, மேலும் தகுதியுடைய பயனாளிகள் விண்ணப்பித்து அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்



