நாகர்கோவில் ஜூன் 25
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த எறும்புகாடு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்.இவரது மனைவி சுதா. இவர்களுக்கு 7 மற்றும் 5 வயதில் பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 25.3.2018 அன்று பாலகிருஷ்ணன் தனது மனைவி சுதா மற்றும் குழந்தைகள் ஆகியோர் இவர்களுக்கு சொந்தமான வாழை தோட்டத்திற்கு சென்றுள்ளனர்.பின்னர் மாலை வீடு திரும்பி உள்ளனர். இரண்டு பெண் குழந்தைகளும் முன்னால் சென்றுள்ளனர். அப்போது வீட்டின் அருகே சென்றபோது மூத்த மகளை காணவில்லை.பின்னர் அருகில் தேடிய போது மறைவான இடத்தில் வைத்து சிறுமியிடம் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது ஆணுறுப்பை காட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். சிறுமி அழுது கொண்டு ஓடியதை பார்த்ததும் பாலகிருஷ்ணன் மற்றும் சுதா கூச்சலிட்டு உள்ளனர்.இதையடுத்து சுரேஷ் அங்கிருந்து தப்பிச் சென்றார்.இது தொடர்பாக நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுரேஷிற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய் ஆயிரம் அபராதமும், போக்சோ வழக்கிற்காக 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய் ஆயிரம் அபராதமும் விதித்து மகிழ நீதிமன்ற நீதிபதி சுந்தர் ஐயா தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக லிவிங்ஸ்டன் ஆஜராகி வாதாடினார்.