நாகர்கோவில் ஜூன் 23
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மீனவர் மக்கள் முன்னணி கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மீனவர் மக்கள் முன்னணி கட்சியின் மாநில தலைவர் சங்கர் கூறியதாவது:- மீனவர்கள் குறித்த சாதி வாரிய கணக்கெடுப்பு உடனடியாக நடத்த வேண்டும் மீனவர்களுக்கு என மத்திய அரசு தனி அமைச்சர் ஏற்படுத்தியது போன்று தமிழக அரசும் ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு தேர்தலின் போதும் இது போன்ற வாக்குறுதிகளை அளித்துவிட்டு இதுவரை அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. மீனவர்களை பழங்குடியினர் பட்டியில் சேர்க்க வேண்டும் இதனை தமிழக அரசு வலியுறுத்தினால் தான் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியும். நாட்டின் அன்னிய செலவாணி மூலம் பல்லாயிரம் கோடி ரூபாயை வருமானத்தை பெற்று தரும் மீனவர் கடலில் மீன் பிடிக்கச் சென்று இறந்தால் அந்த மீனவனுக்கு தமிழக அரசு 3 லட்ச ரூபாய் மட்டுமே வழங்குகிறது. அதே நேரம் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவருக்கு 10 லட்ச ரூபாய் வழங்குவது மிகவும் வேதனையானது. இழப்பீடு வழங்குவது என்பதில் பாரபட்சம் இருக்கக் கூடாது. அதேபோன்று நாகப்பட்டினம் முதல் கன்னியாகுமரி வரையிலான கடற்பகுதிகளில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், காற்றாலை போன்ற திட்டங்களை உடனடியாக கைவிட வேண்டும். ஒரே ஒரு காற்றாலை இருந்தால் கூட ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவிற்கு மீனவர்கள் மீன்பிடிக்க முடியாது எனவே இதன் மூலம் ஏராளமான காற்றாலைகள் மற்றும் மீத்தேன் திட்டங்கள் வந்தால் ஒட்டுமொத்த மீனவர்களுடைய வாழ்வாதாரமே பாதிக்கப்படும் . நீட் தேர்வை எதிற்கும் தமிழக அரசு இந்த திட்டத்தை மட்டும் ஏன் எதிர்க்காமல் மத்திய அரசுக்கு அழுத்தம் தராமல் துணை போகிறது? என்பது தெரியவில்லை. எனவே எக்காரணத்தை கொண்டும் இது போன்ற திட்டங்களை செயல்படுத்தக்கூடாது என்று கூறினார்.



