ஊத்தங்கரையில் புதிய சட்ட அமலாக்கத்தை நிறுத்திட வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நீதிமன்றம் எதிரே வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மூர்த்தி தலைமையில்
புதிய சட்ட அமலாக்கத்தை நிறுத்திட வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் குற்றவியல் சட்ட மாற்றங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், புதிய சட்ட அமலாக்கத்தை நிறுத்த வலியுறுத்தி, வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும், வழக்கறிஞர் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய மாநில அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வில் வழக்கறிஞர் சங்க செயலாளர் வஜ்ஜிரவேல், பொருளாளர் தமிழமுதன், மூத்த வழக்கறிஞர்கள் ரங்கநாதன், கணநாதன், முருகன், என்.கே முருகன், பெருமாள், பிரபாவதி, வெங்கடேஷ் குமார், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.