வேலூர்_20
வேலூர் மாவட்டம், கே .வி .குப்பம் ஒன்றியம், சோழமூர் ஊராட்சி அருள்மிகு ஸ்ரீ கெங்கை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற கெங்கை அம்மன் சிரசு ஏற்றும் திருவிழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், ஆராதனையும், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் ,காப்பு கட்டுதல், சிரசு ஊர்வலமும், மேள தாளங்கள் முழங்க வானவேடிக்கையுடன் சிரசு ஏற்றும் திருவிழாவும் மேட்டுக்குடி ஜி .வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது. இதில் பதவி கந்தசாமி, சுந்தரமூர்த்தி , விழா குழுவினர்கள், ஊர் பொதுமக்கள், பக்தர்கள், இளைஞர்கள், பலர் கலந்து கொண்டனர்.



