சென்னை பெரும்பாக்கத்தில் இயங்கி வரும் கிளெனேகிள்ஸ் ஹெல்த்சிட்டி மருத்துமனை சார்பில் தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தில் காவல் துறையினருக்கான பைப்ரோ ஸ்கேன் கல்லீரல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமை இம்மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் கே. நாகேஷ் மற்றும் கல்லீரல் மற்றும் கணைய சிகிச்சை மற்றும் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு இயக்குனர். டாக்டர் ஜாய் வர்கீஸ் ஆகியோர் முன்னிலையில் கூடுதல் காவல் ஆணையர், தலைமையகம் மற்றும் போக்குவரத்து தாம்பரம் சி.மகேஸ்வரி துவக்கி வைத்தார். ஜூன் மாதம் உலகளாவிய கல்லீரல் கொழுப்பு மாதமாக கடைபிடிக்கப்படுவதை தொடர்ந்து இந்த முகாமை கிளெனேகிள்ஸ் ஹெல்த்சிட்டி மருத்துமனை நடத்தியது. முகாமை துவக்கி வைத்து கூடுதல் காவல் ஆணையர் மகேஸ்வரி பேசுகையில் எங்கள் அதிகாரிகளின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு என்பது மிகவும் முக்கியமானது. இந்த முகாமை ஏற்பாடு செய்த கிளெனேகிள்ஸ் ஹெல்த்சிட்டி மருத்துவமனைக்கு பாராட்டுகளை தெரிவித்து
நன்றி கூறினார்.