வேலூர்_15
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, 44 – அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம் ஊராட்சி, கமாரபாளையம் கிராமத்தில் பொதுமக்கள் பெண்கள் உட்பட ஆறு மாதத்திற்கு மேலாக குடிநீர் பிரச்சனை நிலவி வருகிறது என குடிநீர் பஞ்சம் குறித்து காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலால் சிறிது நேரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பெரும் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து வந்த விரிஞ்சிபுரம் காவல் துறையினர் காவல் உதவி ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான காவலர்கள் விரைந்து வந்து பொது மக்களிடம் சமரசம் செய்து போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த குடிநீர் பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது பொதுமக்களாகிய உங்களுக்கு, உங்கள் குடிநீர் பிரச்சனை குறித்து உடனடியாக தீர்வு காணப்படும் என காவல்துறை உதவி ஆய்வாளர் சிவகுமார் சமரசம் செய்து சாலை மறியலை சீர் செய்தனர்.



