நாகர்கோவில்: ஆக.27.
தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள், சமபந்தி விருந்து
முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் 100 நாட்கள் சாதனைகளை கொண்டாடும் வகையிலும், ஓணம் பண்டிகையை முன்னிட்டும் நாகர்கோவிலில் தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அறுகுவிளையில் உள்ள திருமண மண்டபத்தில், த.வெ.க. முக்கிய நிர்வாகியும் தொழிலதிபருமான பால்ராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட இணைச் செயலாளர் பிரேம் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இதில் தொழிலதிபர் பால்ராஜ் மற்றும் மாவட்ட செயலாளர் மாதவன் இணைந்து, நாகர்கோவில் மாநகராட்சியில் பணிபுரியும் 800-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். தூய்மை பணியாளர்களின் உழைப்பை பாராட்டி, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சமபந்தி விருந்தை மாவட்ட செயலாளர் மாதவன் மற்றும் பால்ராஜ் தொடங்கி வைத்தனர். பின்னர் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து உணவருந்தி நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்தி குமரன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரஞ்சித், இணை அமைப்பாளர் அசோக் செல்லம், கவுன்சிலர்கள் அக்சய கண்ணன், ஸ்ரீலிஜா, மாநகர நிர்வாகி முத்துப்பாண்டி உள்ளிட்ட த.வெ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



