தருமபுரி, ஆகஸ்ட் 05 –
தருமபுரி மாவட்டம் பூமாண்டஅள்ளி அரசு பலவகை தொழில் நுட்பக்கல்லூரியில் ரூ.6.35 கோடி மதிப்பீட்டில் திறன்மிகு மைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் தரைத்தளம் 1060 ச. மீ பரப்பளவு கொண்டும். முதல் தளம் 368 ச.மீ பரப்பளவும் என மொத்தம் 1426 ச.மீ பரப்பளவு கொண்டும் அமைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று பாலக்கோடு அரசு பலவகை தொழில் நுட்பக்கல்லூரியில் ரூ.6.25 கோடி மதிப்பீட்டிலும் திறன்மிகு மைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடம் தரை தளம் 1060 ச.மீ பரப்பளவு கொண்டும். முதல் தளம் 368 ச.மீ பரப்பளவு கொண்டும் என மொத்தம் 1428 ச.மீ பரப்பளவு கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களில் தரக்கட்டுப்பட்டறை, ஆய்வகங்கள், பல்வேறு பணிமனைகள், கலந்தாய்வு கூடங்கள், உற்பத்தி மையங்கள், சேமிப்பு அறைகள், கழிப்பிடங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள புதிய திறன்மிகு மைய கட்டிடங்கள் திறப்பு விழா சென்னை தலைமை செயலகத்தில் இருந்து புதிய கட்டிடங்களை மாணவர்களின் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் காணொளி காட்சி மூலமாக திறந்துவைத்தார். இதை தொடர்ந்து புதிதாக திறக்கப்பட்ட திறன்மிகு மையக் கட்டிடங்களில் ஆட்சியர் சரவணன் குத்துவிளக்கேற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் ஜார்ஜ், செயற்பொறியாளர் ஜனார்த்தனன், பூமாண்டஹள்ளி அரசு பலவகை தொழில் நுட்ப கல்லூரி முதல்வர் செந்தில்குமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ரோஜா, உதவி பொறியாளர்கள் சிலம்பரசன், முருகதாஸ், பிரசன்னா உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



