By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை: நாட்டுப் படகுகள் கடலில் கவிழ்ந்தன
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை: நாட்டுப் படகுகள் கடலில் கவிழ்ந்தன
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை: நாட்டுப் படகுகள் கடலில் கவிழ்ந்தன

Last updated: August 1, 2026 5:55 pm
August 1, 2026
1 View
Share
SHARE

நாகர்கோவில், ஆக. 1 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடத்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மீண்டும் சாரல் மழை பெய்ய தொடங்கியுள்ளது. ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவு 9 மணியளவில் தொடங்கிய மழை இன்று காலை வரை விடிய விடிய இடைவிடாது கொட்டித் தீர்த்தது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.

குறிப்பாக மழையுடன் பலத்த காற்று வீசியது. இதனால் மரக்கிளைகள் முறிந்து விழுந்தும், மின்கம்பங்கள் அறுந்தும் விபத்துகள் ஏற்பட்டது. நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் இருளில் மூழ்கின. குறிப்பாக பல பகுதிகளில் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்படைந்தனர். இன்று காலையில் தான் மின் இணைப்புகள் சீரானது. மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் மழையின் தாக்கம் மிக அதிகமாக காணப்படுகிறது. இதனால் அணைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த நாட்டுப் படகுகள் கடலுக்குள் கவிழ்ந்தன. இரையுமன் துறையை சேர்ந்த அத்தனாஸ் (56) என்பவர் சென்ற நாட்டுப்படகு கடலில் கவிழ்ந்து, வள்ளத்தை கடல் இழுத்து சென்றது. அத்தனாஸ் நீந்தி கரையேறினார். இது போன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றவர்களின் பல நாட்டுப்படகுகள் கடலில் கவிழ்ந்துள்ளன. படகுகள் மட்டும் கரை ஒதுங்கின. மீன்பிடி தொழிலாளிகள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. மீன்பிடிக்க சென்றவர்கள் குறித்த விவரங்களை பொதுமக்கள் விசாரித்து வருகின்றனர்.

இதற்கு இடையே இன்று மீன்பிடி தடைக்காலம் முடிந்து நள்ளிரவில் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்ல இருந்த நிலையில், மழையுடன் கூடிய சூறைக் காற்று வீசியதால் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தகுந்ததாகும்.

விளம்பரம்

You Might Also Like

பேரவையின் போதை விழிப்புணர்வு பேரணி
பணியில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு
தேனியில் உலக போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு “Start Run, Stop Drug” என்ற விழிப்புணர்வு ஓட்டம் மற்றும் உறுதிமொழி நிகழ்ச்சி
தஞ்சாவூரில் போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகள் – போலீசார் இடையே தள்ளுமுள்ளு
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 3 நபர்கள் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தென்காசிமாவட்டம்

திமுக அரசை கண்டித்து பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்

June 23, 2024
92 Views
ஈரோடு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
குடிநீர் மேல்நிலை தொட்டிகளை சுத்தம்
தஞ்சாவூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி; இந்திய துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் யாத்ரு ஆய்வு
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account