தஞ்சாவூர், ஜூலை 31 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 மாதங்களில் 14 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் குழந்தை களின் உரிமைகள் மற்றும் பாதுகா ப்பை முழுமையாக உறுதி செய்யும் வகையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு, போலீஸ் துறை, வருவாய்த்துறை, சமூக நலத்துறை மற்றும் தொடர்புடைய அனைத்து துறைகளும் இணைந்து குழந்தை திருமணங்களை தடுக்கும் பணிக ளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கடந்த மே மாதம் 1ஆம் தேதி முதல் ஜூன் 28 ஆம் தேதி வரை மாவட்ட முழுவதும் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக் கைகளின் மூலம் மொத்தம் 14 குழந்தை திருமணங்கள் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. சம்மந்தப்பட்ட குழந்தைகள் உடனடியாக பாதுகாக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள், கல்வி தொடர்பாக தொடர்வதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் மறுவாழ்வு பாதுகாப்பு நடவடிக்கைகள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு குழந்தை திருமண தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன் எச்சரிக்கப்பட்டு சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரத்தநாடு தாலுகாவில் 3 திருமணங்களும், திருவையாறு, தஞ்சாவூர், திருவிடைமருதூர் ஆகிய தாலுகாக்களில் தலா 2 திருமணங்களும், பட்டுக்கோட்டை, கும்பகோணம், பேராவூரணி, திருக்காட்டுப்பள்ளி, பாபநாசம் ஆகிய தாலுகாக்களில் தலா 1 திருமணமும் தடுத்து நிறுத்தப்பட்டது.
குழந்தை திருமணம் என்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கும், 21 வயதுக்கு உட்பட்ட ஆணுக்கும் திருமணம் நடத்துவது அல்லது அதற்கு உடந்தையாக இருப்பது குழந்தை திருமண தடுப்பு சட்டத் தின் கீழ் கடுமையான குற்றமாகும். இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சமரசம் இன்றி கடுமையான வழக்குப்பதிவு உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். பொதுமக்களில் முழுமையான ஒத்துழைப்புடன் தஞ்சாவூர் மாவட்ட த்தை குழந்தை திருமணமற்ற மாவட்டமாக மாற்று வதற்கு மாவட்டநிர்வாகம் தொடர்ந்து உறுதியுடன் செயல்படும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.



