ஈரோடு, ஜூலை 30 –
ஈரோடு மொடக்குறிச்சி 46 புதூர் ஊராட்சி நொச்சிக்காட்டு வலசில் புகழ்பெற்ற வெள்ளைப் பாறை முனியப்பசாமி சாமி கோவில் உள்ளது. ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் வகையறா கோவில்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் ஆண்டுதோறும் பொங்கல் விழா மிக சிறப்பாக நடப்பது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டும் பொங்கல் விழா வருகிற 5 ந் தேதி தொடங்குகிறது.
இதையொட்டி 4 ந் தேதி மாலை 4 மணிக்கு காவிரி ஆற்றிக்கு சென்று தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு அன்னதானம் வழங்கப்படுகிறது. 5ந் தேதி அதிகாலை முதல் பொங்கல் விழாவும் மாலை 6 மணிக்கு பெரும் பூஜையும் நடக்கிறது. 6ந் தேதி மறு பூஜையுடன் விழா முடிவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் ஊர் பொது மக்கள் செய்து உள்ளனர்.


