சென்னை, ஜூலை 29 –
இந்திய குடியரசு கட்சி வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் எழும்பூர் இக்ஷா மையத்தில் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் ரமேஷ்குமார் தலைமையிலும், மாநில செயற்குழு உறுப்பினர் தினேஷ்குமார் முன்னிலையும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து அறிமுகம் செய்து வைத்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மாநிலம் பொருளாளர்கள் மங்காப்பிள்ளை, சி.எஸ்.கொளரிசங்கர், கொள்கை பரப்புச் செயலாளர் தன்ராஜ், மாநில அமைப்புச் செயலாளார் எம்.மோகன் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள், பிற அணியினர் கலந்து கொண்டனர்.



