தருமபுரி, ஜூலை 23 –
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பாலவாடி, சோமனஹல்லி, பேட்றஅள்ளி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் அதிமுக நிர்வாகிகளை புதியதாக பொறுப்பேற்ற தருமபுரி அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் மருத்துவர் அசோகன் நேரில் சந்தித்து அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை பெற்றார்.
பின்னர் பேசிய அவர்: அதிமுக என்பது ஆலமரம். அதில் சில இலைகள் விழ தான் செய்யும். ஆனால் பல இலைகள் துளிர்க்கும். அது போல தான் அதிமுகவும் என தெரிவித்தார். தற்போது விஜய் ஆட்சி சினிமா மோகத்தால் வந்தது. எம்ஜிஆர், அம்மாவின் கரத்தை வலுப்படுத்தியது போல், கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் கரத்தையும் வலுப்பெற அனைவரும் பாடுபட வேண்டும் என நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார்.



