ஈரோடு, ஜூலை 22 –
ஈரோடு மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான நலத்திட்ட முகாம் ஈரோடு பூந்துறை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. ஈரோடு மாநகராட்சி கமிஷனர் அர்பித் ஜெயின் ஜெயில் நிகழ்ச்சியில் வரவேற்றார். அமைச்சர் விஜய் பாலாஜி முகாமை தொடங்கி வைத்து பேசினார்.
இதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தூய்மை பணியாளர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று முதல் அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையொட்டி இங்கு பல்வேறு துறைகளின் சார்பில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டு தூய்மை பணியாளர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகிறார்கள்.
தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு தரமாக இல்லை என்று இது வரை யாரும் புகார் செய்யவில்லை. இது குறித்து புகார் வந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி வழங்கும் இலவச வேட்டி சேலை யாரும் குறை சொல்ல முடியாத வகையில் தரமாக இருக்கும் . இது தொடர்பாக நெசவாளர்கள் அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். சென்னிமலையில் பெட் சீட் தேக்கம் குறித்து ஆய்வு நடத்தப்படும். ஈரோடு சோலார் பஸ் நிலையம் பொது மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டது. இந்த பஸ் நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆனந்த் மோகன் எம்எல்ஏ, துணை மேயர் செல்வராஜ், உதவி ஆணையர்கள் அண்ணாதுரை, விநாயகம் மண்டல தலைவர்கள் தண்டபாணி சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர நல அலுவலர் கௌரி சரவணன் நன்றி கூறினார். இதன் பிறகு ஈரோடு பஸ் நிலையம் அருகே தனியார் மண்டபத்தில் நடந்த தூய்மை பணியாளர்கள் நலத் திட்ட முகாமிலும் அமைச்சர் விஜய் பாலாஜி கலந்து கொண்டார்.



