ஈரோடு, ஜூலை 21 –
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.வி.கிரண் ஸ்ருதி ஆணைக்கிணங்க, ஈரோடு டவுன் டிஎஸ்பி முத்துக்குமார் அறிவுறுத்தலின்படி, ஈரோடு தெற்கு போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன் தலைமையில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சிக்னலில் போக்குவரத்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும், நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக, வாகன ஓட்டிகளைக் கவரும் வகையில் ராட்சத பொம்மை வடிவிலான உருவத்தைக் கொண்டு நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது பொதுமக்களின் பெரும் கவனத்தை ஈர்த்தது.
இந்நிகழ்வில் தெற்கு போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரஞ்சித் ராஜா, தலைமை காவலர் அர்ஜுனன், முதல் நிலை காவலர்களான சக்திவேல், சத்யானந்தம் உள்ளிட்ட காவலர்கள் பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டனர்.



